Search This Blog

Sunday, August 28, 2011

"மங்காத்தா'' மூலம் எனக்கு கிடைத்த குட்டி தோழி!

*சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக வெளியிடும் படம் ‘மங்காத்தா’. அஜீத் ஹீரோ. இதில் நடித்தது பற்றி படத்தின் ஹீரோயின் த்ரிஷா கூறியதாவது: வெங்கட் பிரபு படங்களில் ஏதோ ஒரு விஷயம் இருக்கும். அவர், ‘மங்காத்தா‘வில் அஜீத்துடன் நடிக்கிறீர்களா? ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மாதிரி முழு நீள ரோல் கிடையாது. ஆனால் பேசும்படியாக இருக்கும்’ என்று சொன்னார். கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த படத்தில் எனது காஸ்ட்யூமராக வாசுகி செயல்பட்டார். வெங்கட் பிரபுவின் தங்கை. ‘நான் இத்தனை அழகா’ என்று எனக்கே உணர்த்தியவர். அவர் டிசைன் செய்து கொடுத்த உடைகள் இன்னும் என்னை அழகாக காட்டியது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் அவரது டிப்ஸை பின்பற்றுகிறேன். எனது அம்மா உட்பட எல்லோருமே என் அழகு கூடியிருப்பதாகச் சொல்கிறார்கள். கதைப்படி மும்பையில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் மாடர்ன் உடைகள் அணிந்து நடித்திருக்கிறேன். அஜீத்துடன் இது மூன்றாவது படம் என்றாலும் இதில் எனக்கு கூடுதலாக ஒரு தோழி கிடைத்தாள். அது அஜீத்தின் குட்டி மகள். அவளுக்கும், அஜீத் செய்து தரும் சாப்பாட்டுக்கும் நான் அடிமையாகிவிட்டேன்.





பேரித்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

* நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி)
* உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரித்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபுதாவுத்)

விளக்கம்: கனிந்த பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பது சிறந்ததாகும். அது இல்லையென்றால் சாதாரண பேரித்தம் பழம் அதுவும் கிடைக்கவில்லையென்றால் சில மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.